புதுமைப் பெண்
ப. ஜீவானந்தம்
Pages - 148
திரு. ப. ஜீவானந்தம் அவர்களால் எழுதப்பெற்ற "புதுமைப் பெண்" எனும் இந்நூல் , பெண்ணுரிமையை வலியுறுத்தும் சிறந்த திறனாய்வு படைப்பாகும். தொல் காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் கற்பு ஆடவர்க்கு வற்புறுத்தப்படவில்லையே; ஏன்? பல பெண்களோடு ஒரு ஆண் வாழ்ந்ததைக் கண்டிக்கப்பட வில்லையே; ஏன்? 'வரைவின் மகளிர்' எனும் அதிகாரத் தைப் படைத்த வள்ளுவப் பெருந்தகை ஆடவர்களை 'பொது மகன்' எனக் குறிப்பிடவில்லையே; ஏன்? 'மாய மகளிர் 'இரு மனப்பெண்டிர்' 'பொருள் பெண்டிர்' என வருணித்து பெண்களை 'பொது மகள்' எனச் சுட்டிய வள்ளுவப் பேராசான் ஆண்களையும் சுட்டிக் காட்டிருக்க வேண்டாமா? இத்தகு வினாக்களைப் போட்டு பெண்ணைப் பற்றிய சமுதாய கண்ணோட்டம் ஈராயிரம் ஆண்டுகளாக எப்படி இருந்தது; இருந்து வருகிறது? என்பதையும் இனி 'புதுமைப் பெண்' எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அமரர் ஜீவா இந்நூலில் அழகுற விளக்கியுள்ளார்.
புதுமைப் பெண்: by P.Jeevanandham (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site