முல்லைத்திணை - மு.வரதராசனார்
Pages - 159
காதல்பாட்டுக்களை நெறிப்படுத்தி முறையுற வகுத்த பெருமை, பழந்தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்பாகும். அவ்வாறு நெறியும் முறையும் போற்றிவளர்த்த காரணத்தால்தான், பழைய காதல்பாட்டுக்களில் கலைச்செல்வம் மிளிர்வதுடன் நுட்பமும் தூய்மையும் குன்றாமல் விளங்குகின்றன. மற்றவர்கள் உடலின் பசியைப் புனைந்துரைத்துக் களித்துத் திரிந்த அந்தக்காலத்தில். தமிழ்ச் சான்றோர் உள்ளத்தின் உணர்வைத் தெரிந்தெடுத்துக் கலைத்தொண்டு ஆற்றிய சிறப்புக்குக் காரணம் அதுவே ஆகும்.
முல்லைத்திணையாக வகுக்கப்பட்ட பாட்டுக்களின் பெற்றியைக் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பை எனக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தது. பல்கலைக்கழகத்தார் 'ஆனரரி ரீடர்' என்னும் பதவி அளித்து, ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறு கோரினர். 1946 நவம்பர் 4,5 ஆகிய நாட்களில் அவ்வாறு நிகழ்த்திய சொற்பொழிவே இந்நூலாக அமைந்தது. நூல்வடிவில் இதை வெளியிட உரிமை நல்கிய பல்கலைக்கழகத்தார்க்கு நன்றியுடையேன்.
முல்லைத்திணை: by Mu.Varadarajan (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site