இது என்ன தலைப்பு !!! ஒரு வேளை புழிய புழிய இலக்கியமா எழுத போறாங்களோ..நமக்கு ஸ்கூலில் படிக்கிற போதே இலக்கணம் கொஞ்சமா தான் வரும்..இதுல இலக்கியமா ?!!..ஆத்தி ஏன் லக்ஷ்மி இப்பிடினு? நீங்க கேட்கிறது எனக்கு காதுல விழுது.
இந்த கதை நிச்சியமா இலக்கியம் சார்ந்தது இல்லை..நம் வாழ்க்கையில்,நாம ரசிக்கிற நம்மை சுற்றி இருக்கிற மனிதர்களை, நட்பை, சின்ன சின்ன சந்தோஷகளை பற்றிய கதை தான். ஓஹோ ! அப்ப நிறைய கேரக்டர்ஸ் இருக்கும்..அப்பிடின்னா..இது கிட்டதட்ட நம்ம விசு படம் மாதிரி இருக்குமோ?கம்முன்கிட!!!!..நிறைய கேரக்டர்ஸ் இருந்தா விசு படம் இல்லாட்டி விக்கிரமன் படமா?? என்ன ஒரு சேட்டை ??!!!
அது என்ன உறிமாடப்பூக்கள்? அப்பிடின்னா என்ன ? உறின்னா… நம்ம டிவியில் உறி அடிச்சு விளையாடுறதை பார்த்திருப்பமே..அது தான் அதுல பெரிய கயிற்றிலே ஒரு பானையை கட்டி வச்சிருப்பாங்க அது தான் உறி, மாடம்ன்னா வீடு, இப்ப புடிச்சிட்டீங்களா ?? இங்கிருக்கும் நண்பர்கள் தான் பூக்கள். ஆக இது ஒரு அப்பார்ட்மெண்ட் கம்மியூனிட்டியில் இருக்கும் நாலு நண்பர்களை பற்றியது.இதில் ஒரு பெண் மீரா கோபாலன். மற்றவர்கள் ரஞ்சித், அமீன், வெங்கிட்டு.ஐ !!! நான் புடிச்சுட்டேன் இவங்க மூணு பேரில் யாரை மீரா கல்யாணம் பண்ண போறா அதானே ஸ்டோரி?? என்கிறீர்களா.
ஸ்டீரியோ டைப் படங்களையும்,சீரியலையும் பார்த்த வந்த தன் விளைவு தான் இது !!! ம்ச்.. அது எல்லாம் போர் அடிச்சு போய் தானே இதை படிக்க வர்றீங்க..இங்கேயும் எதுக்கு அதையே படிச்சுகிட்டு?? இந்த நாலு நண்பர்களின் வாழ்க்கையில் இருக்கும் நிறைய நட்பு,கொஞ்சம் காதல், அதைவிட ரொம்ப கொஞ்சமாக சோகம், இது எல்லாத்தையும் விட நிறைய சந்தோஷம்னு அவங்க வாழ்க்கையோடு சேர்ந்து பயணபட போகிறோம்.
வெல்கம் டூ உறிமாடப்பூக்கள் !!!
Urimadda Pookkal: உறிமாடப் பூக்கள் (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site