காசி மஹாத்மியம்
வ. சு. செங்கல்வராய பிள்ளை
Pages - 55
"காசி உள்ளுநர், காசி கேட்குநர்
காசி காணுநர், ஆசின் முத்தரே"
என்று போற்றப்படும் காசித் தலத்தின் அருமையையும் அத்தலத்துறையும் ஈசன் விசுவேசரரின் பெருமையையும் எடுத்தோதும் நூலே காசி மஹாத்மியம் அல்லது சிம்ஹத்வஜன் கதை ஆகும். இக்கதையைப் படிப்போர்க்கு அழியா மேன்மையும், புகழும், புண்ணியமும் கைகூடும் என்பது உறுதி.
'திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு' ஓலைச் சுவடிகளில் சிதறிக் கிடந்த திருப்புகழை உலகுக்களித்த வள்ளல் உயர்திரு. வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறுவது. அன்னார் வாழ்ந்த, வாழ்க்கைச் சூழலும்; அவரது அயராத உழைப்பும்; இடையிடையே அவர் செய்த தெய்வத் திருப்பணிகளும்; அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளைத் தேடிச் சேகரித்து அவற்றை மூன்று பாகங்களாக அச்சிட்டு வெளியிட அவர் மேற்கொண்ட அருமுயற்சிகளும் இந்நூலுள் விளக்கப்பட்டுள்ளன.
காசி மஹாத்மியத்தையும், திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாற்றினையும் எழுதிய பெருந்தகை என் தந்தையார் தணிகைமணி டாக்டர் வ.சு. செங்கல்வராய பிள்ளை ஆவார். இவரால் எழுதப்பட்ட இவ்விரு நூல்களின் முதல் பதிப்பு முறையே 1906, 1920-இல் வெளியிடப்பட்டது. பல்லாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஐந்திணைப் பதிப்பகத்தின் உரிமையாளர் உயர்திரு. குழ. கதிரேசன் அவர்கள் பெருந்தன்மையோடு தாமே மனமுவந்து அவ்விரு நூல்களையுஞ் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அன்னார் வளம் பல பெற்று, சிறப்புறத் தமிழ்த் தொண்டாற்றிட காசிநாதனின் அருள் வேண்டி, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காசி மஹாத்மியம்: by V.S. Chengalvaraya Pillai (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site